×
 

இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நன்றி என்ற வாசகத்தை எழுதியுள்ளது.

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் ஈரான், தனது ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு “நன்றி” என்ற வாசகத்தை எழுதியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் சுமார் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், ஈரான் தனது 83-வது அலை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின்போது ஏவுகணைகளில் “Thank you to the people of India”, “Thank you German people”, “Thank you people of Spain” மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கான நன்றி செய்திகள் எழுதப்பட்டிருந்தன. ஈரானின் ஏரோஸ்பேஸ் படை இந்தச் செய்திகளை ஏவுகணைகளில் கையால் எழுதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்திய மக்கள் போரால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதையும், பிரதமர் நரேந்திர மோடி போரை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருவதையும் ஈரான் பாராட்டியுள்ளது. ஈரான் தூதரகம், “இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் மக்களின் ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த 14 நாட்டை விட்டு உடனே வெளியேறுங்க! அமெரிக்கா ஆர்டர்! ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் என நீளும் லிஸ்ட்!

இதேவேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 10 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், பென்டகன் மேலும் 10,000 வீரர்களை மேற்காசியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதித்து வருகிறது. எதிரி நாடுகளின் கப்பல்களை மட்டும் தாக்கி வருகிறது.

ஈரான் எழுதிய “நன்றி” செய்தி, போர் சூழலில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு வகையான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேற்காசியப் போர் தொடரும் நிலையில், உலக நாடுகள் அமைதிக்கு வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா-ஈரான் உறவு நீண்டகாலமாக நட்பானது. இப்போது ஈரான் வெளிப்படுத்திய நன்றி, இரு நாட்டு மக்களிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share