×
 

தி.குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் வேண்டாம்..!! ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், நீதிமன்றத்தின் மானியத்தை அவமானப்படுத்தும் வகையில் பேட்டிகள் அல்லது பதிவுகள் செய்யக்கூடாது என அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு, பதற்றமான சூழலை ஏற்கனவே சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அறுபடைவீடுகளில் முதல் படைவீடாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது இந்து மரபாக இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் இருப்பதால் சமூக பதற்றத்தால் தடை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். கடந்த நவம்பர் 30 அன்று, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த மனுவை விசாரித்து, "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்" என உத்தரவிட்டார். மேலும், 144 தடை உத்தரவை ரத்து செய்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதையும் படிங்க: “அவசரப்படுத்தாதீங்க” - தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிபதிகள்... திருப்பரங்குன்றம் வழக்கில் முக்கிய அறிவிப்பு...!

இந்த உத்தரவு, கோவில் பக்தர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் வரவேற்பைப் பெற்றது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்" எனவும், 500க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார். இருப்பினும், சமூக நல்லிணக்கம் குறித்து கவலைப்பட்ட தமிழக அரசு, தனி நீதிபதியின் உத்தரவு அதிகார வரம்பை மீறியது என வாதிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் "தீபம் ஏற்றினால் சமூக பதற்றம் ஏற்படும்" என வாதிடப்பட்டது. மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மேலும் விசாரணையின்போது, நீதிமன்றம் அனைத்து தரப்பினரிடமும், "ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்ற மானியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள்" என அறிவுறுத்தியது. "உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம், காத்திருங்கள்" எனவும் கூறினர். அனைத்து வழக்குகளையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்கப்படும். இந்த பிரச்சனை தீவிரமானது புதிய இடையீட்டு மனுதாரரை சேர்க்க வாய்ப்பு இல்லை.

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவருக்கும் ஐகோர்ட்டின் மாண்பை கடைபிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும்.  விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன்பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது” என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, சமூக ஊடகங்களில் ஏற்கனவே பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரத்துக்கு தடையாக அமையும்.

இதற்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மனுதாரர் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து, தங்களின் கருத்து கேட்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் கடந்த சில நாட்களாக போலீஸ் குவியல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலை உச்சியில் பாதுகாப்பு புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர்கள் "இந்து மரபை காக்க வேண்டும்" எனவும், திமுக ஆதரவாளர்கள் "100 ஆண்டு மரபை மீறி தீபம் ஏற்றினால் போராட்டம்" எனவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு, இத்தகைய விவாதங்களுக்கு தற்காலிகத் தடையாக அமைந்துள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறுமா என்பது இன்னும் தெரியவில்லை. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... “CISF வீரர்களை அழைத்ததில் தவறில்லை” - தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share