×
 

வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

தெலுங்கானாவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா நகரில் கலால்வாடாவில் உள்ள ஒரு  வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு முழுக்க தீ பரவிய நிலையில், சமையலுக்காக பயன்படுத்தப்பட்ட எல்பிஜி சிலிண்டர் ஒன்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 50 வயது மூதாட்டியான சந்திரகலா, அவருடைய மகள் தனம்மாவின் பிள்ளைகளான பேரன் லட்சுமணன் (17) மற்றும் பேத்தி பிரணதி (14) ஆகியோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். தீ வீடு முழுவதும் பரவியதாலும், மூவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாலும், தீயில் கருகி உயிரிழந்தனர். 

தனம்மாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மகள் மற்றும் மகனுடன் மிரியாலகுடாவில் உள்ள சந்திரகலாவின் வீட்டில் தங்கியுள்ளார். தனம்மா குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலை செய்ய கடந்த 3 நாட்களுக்கு முன்பு புனேவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் குழந்தைகள் 2 பேரும் அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளனர். 

இதையும் படிங்க: டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

மிரியாலகுடா டிஎஸ்பி ராஜசேகர் ராஜு சம்பவ இடத்திற்கு வந்து  ஆய்வு செய்தார். பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலாவது நகர   போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்த விசாரணையைத் மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: 2 கிலோ மீட்டருக்கு குலுங்கிய பூமி... வெடித்துச்சிதறிய நாட்டு வெடிகள்... கும்பகோணத்தில் நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share