×
 

டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

பயணிகளுடன் சேர்ந்து விரட்டி அடித்து செருப்பால் அடித்து துறத்திய நடத்துனர். டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின்படி நடத்துனர் மீது வழக்குப்பதிவு

தெலங்கானா மாநில ஆர்.டி.சி.பஸ்சில் பணம் பெற்று கொண்டு டிக்கெட் கொடுக்காத நடத்துனர் திடிர் சோதனை வந்த அதிகாரிகளை லஞ்சம் கேட்பதாக கூறி பயணிகளுடன் சேர்ந்து விரட்டி அடித்து செருப்பால் அடித்து துறத்திய நடத்துனர். டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின்படி நடத்துனர் மீது வழக்குப்பதிவு

தெலங்கானா மாநில ஆர்.டி.சி தலைமையக அமலாக்கப் பிரிவின் பொறுப்பாளர்களான பெத்ததொட்டி யேசையா மற்றும் வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது குழுவினருடன் சங்காரெட்டி மாவட்டம், ராய்க்கோடு மண்டலத்தில் ஜஹீராபாத் - நாராயண்கேட் வழித்தடத்தில்   ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது நாராயண்கேட் பணிமனையைச் சேர்ந்த  பஸ்சை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ​​நடத்துநர் ஒரு பயணியிடமிருந்து ரூ. 20 பணம் பெற்று கொண்டு  அவருக்கு பயணச்சீட்டு வழங்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தச் சூழலில், விதிகளின்படி நடத்துநருக்கு விளக்க நோட்டீஸ் வழங்க ஆய்வு அதிகாரிகள் தயாராகி கொண்டுருந்தனர்.  இதனால் நடத்துநர் தேவ்சோத் வசந்த் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது தவறை மறைக்க பயணிகளிடம் லஞ்சம் கேட்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்தது மட்டுமல்லாமல், பஸ்சில் இருந்த பயணிகளையும் அதிகாரிகளுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்.

இதையும் படிங்க: ”பார்ப்போம் இன்னம் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

மேலும் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி  அதிகாரிகளைத் துரத்தி தாக்கி  அதிகாரிகளிடமிருந்து பதிவேடுகளை (குற்றச்சாட்டுக் குறிப்பாணை மற்றும் எம்.டி.டீ 353 புத்தகம்) பறித்துக்கொண்டு  திட்டத் தொடங்கினான் இந்தத் தாக்குதலில், டிக்கெட் பரிசோதக பொறுப்பாளர் யேசையாவின் இடது கை விரலில் காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் மற்றொரு அதிகாரியான வி. பிரகாஷின் நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே இந்த நடத்துனர் லஞ்சம் பெற முயன்ற டிக்கெட் பரிசோதகரை பயணிகளுடன் சேர்ந்து தாக்கியதாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட டிக்கெட்  சோதனை அதிகாரி யேசையா, ராய்க்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் குற்ற எண் 46/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 121(1)-ன் கீழ் (பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியரைத் தடுத்தல் மற்றும் காயப்படுத்துதல்) என நடத்துநர் தேவ்சோத் வசந்த் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பயணிகள் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளைத் தவறாக வழிநடத்துவதற்காக நடத்துநரின் நடத்தை குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  டிஜிஎஸ் ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் ஒய். நாகி ரெட்டி இந்தச் சம்பவம் குறித்துப் பதிலளித்த டிஜிஎஸ் ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் நாகி ரெட்டி  ஆர்.டி.சி. பணியாளர்களிடையே ஒழுங்கின்மை பொறுத்துக்கொள்ளப்படாது  பயணச்சீட்டு இல்லாத பயணியின் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அதிகாரிகளைத் தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம். பணியில் இருக்கும் பணியாளர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் சட்டப்படி தண்டிக்கப்படும் என்றும், அனைத்து ஊழியர்களும் நல்லிணக்கமான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: இடி,மின்னல் தாக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..கண்ணகி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share