காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி கட்டுப்பாடு...!
சிறுத்தை நடமாட்டத்தால் திருப்பதி மலைப்பாதை நடைப்பாதையில் நடந்து செல்ல நேரக்கட்டுபாடு கொண்டு வந்த தேவஸ்தானம்
திருப்பதி அலிபிரி நடைபாதையின் ஏழாவது மைல் அருகே உள்ள பகுதிகளில் சிறுத்தைகள் மற்றும் கரடிகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இங்கு நிரந்தர கட்டளை கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலிபிரியிலிருந்து திருமலை செல்லும் இந்த நடைபாதையில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் பக்தர்களைத் தாக்கியதாக அறியப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை பலத்த காயமடைந்தது, மேலும் லக்ஷிதா என்ற 7 வயது சிறுமி உயிரிழந்து.
அந்த நேரத்தில், நடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி தேவஸ்தானம் குச்சிகளையும் வழங்கியது. மாலை 6 மணியளவில் நடைபாதை மூடப்பட்டது. நடைபாதை அருகே வரும் சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடித்து சிலவற்றை தொலைதூர காடுகளில் விடப்பட்டன, மற்றவை எஸ்.வி. உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டன. வனத்துறையின் மேற்பார்வையில், இப்பகுதியில் 26 சூரிய ஒளி நேரடி கேமராக்களும் பொருத்தப்பட்டன.
இதையும் படிங்க: பெரியாருக்கும் சாதி சாயம்! இதெல்லாம் என்ன வேலை? கடும் கண்டனத்தை பதிவு செய்த விஜய்..!
தற்போது அதில் சிறுத்தை மற்றும் கரடி அதன் குட்டி இந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. இரவில் இந்த பகுதியில் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் பெரும்பாலும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததால் இந்தச் சூழலில்தான் ஏழாவது மைலில் ஒரு கட்டளைக் கட்டுப்பாட்டு அறையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.சிறுத்தைகள் அல்லது கரடிகள் எங்காவது இருந்தால் அல்லது அவை நடைபாதைக்கு அருகில் வந்தால், திருப்பதியில் உள்ள பயோட்ரிம் அலுவலகத்திற்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்று அவற்றை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்போது புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டால், இரண்டு உயிரியலாளர்கள் மற்றும் அரசு வனத்துறையைச் சேர்ந்த பத்து ஊழியர்கள், அதே போல் சுமார் 30 தேவஸ்தான வன மற்றும் விஜிலென்ஸ் ஊழியர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மானிட்டரில் உள்ள கேமராக்கள் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் தற்போது அலிபிரி நடைப்பாதையில் காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே நடக்க அனுமதிப்பட உள்ளது. அதன்பிறகு 70 முதல் 100 பக்தர்கள் ஒன்றாக கூட்டமாக செல்ல அனுமதிப்பட உள்ளது. அதேநேரத்தில் மதியம் 2 மணிக்கு பிறகு 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மலைப்பாதையில் செல்ல அனுமதி இல்லை. இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவார்கள்! மக்களாட்சி முக்கியம்... ஓட்டுக்கு காசு குறித்து விஜய் தாக்கு!