×
 

கனமழை எச்சரிக்கை எதிரொலி... கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது...!

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஒவ்வொரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சற்று மழை பொழிவு அதிகமாக இருந்தாலும் இடையில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மோன்தா புயல் உருவாக்கிய போது பெய்த மழை படிப்படியாக குறைந்தது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 

இதையும் படிங்க: சுழற்றி அடிக்க போகுது... வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுவினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் பணியமர்த்தபட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share