×
 

பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

பிளாஸ்டி பாட்டில்கள், கேன்கள்களில் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எரிபொருள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கத் தமிழக அரசு இன்று மிகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் பாதுகாப்பற்ற கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது டீசல் வழங்கக் கூடாது என அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவையான எரிபொருளைப் பதுக்கி வைத்துச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இத்தகைய குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: இனி 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!

பெட்ரோல் பங்குகளின் இருப்பு மற்றும் விற்பனையைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் மாவட்டந்தோறும் சிறப்புத் தனிப்படைகள் (Special Task Force) அமைக்கப்பட்டுள்ளன.

அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளை மீறிப் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கும் பங்க் உரிமையாளர்களின் உரிமங்கள் (License) உடனடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தற்போது சமையல் எரிவாயு (LPG) மற்றும் பெட்ரோல் உற்பத்தியை 10-25% வரை அதிகரித்துள்ள போதிலும், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயலும் கும்பல்களை ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு தோள் கொடுக்கும் இந்தியா! எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க 5,000 டன் டீசல் விநியோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share