ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!
''ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை (IRGC), போலீஸ் ஆகியவை ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் "நிச்சயமான மரணம்" (certain death) என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
டிரம்ப் தனது வீடியோ அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் முழு ராணுவத் தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டது. பலர் சரணடைய விரும்புவதாக தகவல்கள் வருகின்றன.
ஈரான் ராணுவம், IRGC, போலீஸ் ஆகியோர் ஆயுதங்களை கீழே போட்டு முழு நோய் தண்டனை விலக்கு (full immunity) பெறலாம். இல்லையெனில் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அழகாக இருக்காது (it won't be pretty).
இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்! மோசமான விளைவுகள் காத்திருக்கு! ஜாக்கிரதை! ஈரானுக்கு கெடு விதித்தார் அதிபர் ட்ரம்ப்!
ஈரான் உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். கடந்த 50 ஆண்டுகளாக "அமெரிக்காவிற்கு மரணம்", "இஸ்ரேலுக்கு மரணம்" என்ற கோஷங்களுடன் அமெரிக்காவை அச்சுறுத்தி வருவதாக கூறினார். இப்போது அணு ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் கொண்ட ஈரான் ஆட்சி அமெரிக்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்றார். இதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஈரான் மக்கள் கமேனி உயிரிழப்பை கொண்டாடுவதாகவும், அமெரிக்கா ஈரான் மக்களுடன் நிற்பதாகவும் டிரம்ப் கூறினார். "தைரியமாக, வீரமாக உங்கள் நாட்டை திரும்பப் பெறுங்கள். இது உங்கள் சுதந்திரத்திற்கான சிறந்த வாய்ப்பு" என்று ஈரான் மக்களைத் தூண்டினார். கடந்த 36 மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டன. 9 கப்பல்கள் உட்பட கடற்படை அமைப்புகள் அழிக்கப்பட்டன. போர் நடவடிக்கைகள் தொடரும், இலக்குகள் அடையப்படும் வரை நிற்காது என்றார்.
மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தெரிவித்த டிரம்ப், மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அமெரிக்கா மீண்டும் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வரும் நிலையில், பிராந்தியம் முழுவதும் அச்சம் நிலவுகிறது. இந்தியர்கள் உள்ள நாடுகளில் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தை வெற்றி பெறலைனா அவ்ளோதான்! மோசமான நாளா மாறும்!! ஈரானுக்கு ட்ரம்ப் வெளிப்படையான மிரட்டல்!