×
 

பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து TTV தினகரன் விமர்சித்து உள்ளார்.

தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இதுவும் ஏமாற்று வேலையே என அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்ததாக கூறினார்.

ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்றார்.

இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது என்பதையும் Ttv தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!

எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share