“முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!
திமுக எம்.எல்.ஏவின் இந்த கொச்சையான பேச்சைக் கண்டித்து தவெகவின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் வைத்த விமர்சனம் சர்ச்சையானது. மிசா குறித்து அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்தில் திமுகவின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏவும் போட்டி போட்டு கொண்டு விஜயை ஒருமையில் கொச்சையாக விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது.
"எங்கள் தலைவர் போரா சிறையில் இருந்தது உண்மை தான். முதலமைச்சருக்கு கூட வாய் கோணாலாக உள்ளது. அதை எப்படி ஆச்சு என்பதை என்று என்னால் சொல்ல முடியாது. அதை உங்கள் யுகத்துக்கே விட்டுவிடுகிறன். சட்டமன்றத்தில் நீ பேசிவிட்டு ஓடுகிறாய். நீ பேசிய பேச்சுக்கு எங்கள் தலைவர் பதில் சொல்ல தயாராக உள்ளோம். 5 நிமிடம் மைக் ஆப் செய்யாமல் பேச விடுங்க. நாங்கள் சிறைச்சாலை செல்ல தயாராகவுள்ளோம்" என்றார்.
மேலும் “நான் சொல்வதை திருப்பு உரக்க சொல்லுங்க. லண்டனுக்கு போயுள்ள விஜய்க்கு காது கேட்க வேண்டும். அவன் ஒரு ஆள் கூட போயிருக்கான். முதலமைச்சர் இரண்டு பேர் கூட லண்டன் சென்றுள்ளார்” என்றும் அவர் கூற கீழே இருந்த தொண்டர்கள் சில பெயர்களை சொன்னதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
திமுக எம்.எல்.ஏவின் இந்த கொச்சையான பேச்சைக் கண்டித்து தவெகவின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகிகள் பேசியதாவது: எங்களுடைய முதல்வர் அவர்களை திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதற்காக, இன்று எஸ்பி அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருக்கிறோம். அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல, எங்களுடைய முதல்வரின் ஒரே ஒரு வார்த்தைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் அத்தனை நிர்வாகிகளும் பொறுமை காத்து அமைதியாக இருக்கின்றோம். அவர் சொல்வதுபடிதான், எந்தச் சூழ்நிலையிலும் பெண்களையோ மற்றவர்களையோ இழிவாகப் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இதே நிலை திமுக கட்சியைச் சார்ந்த யாராக இருந்தாலும் தொடர்ந்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்றைய தினம் திமுக சார்பில் எங்கள் முதல்வர் அவர்களைக் கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. வசந்த கார்த்திகேயன் அவர்கள் எந்த அளவுக்குப் பெண்களைப் பற்றி இழிவாகப் பேச முடியுமோ, அந்த அளவுக்கு இழிவாகப் பேசியிருக்கிறார்.
அதேபோல, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆ. ராசா அவர்களும் பெண்களைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், திமுக என்றால் ஆபாசம்; ஆபாசம் என்றால் திமுகதான். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை இந்தத் தேர்தலில் கற்பித்தும், அவர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.
இதேபோல இந்த நிலை நீடித்தால், அதற்கான தண்டனையை எங்களுடைய முதல்வர் அவர்கள் எப்படி கொடுப்பார் என்பதை மக்கள் பார்ப்பார்கள்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள வேண்டும். வசந்த கார்த்திகேயன் அவர்கள், ‘எங்களுடைய நிர்வாகிகள் ஆய்வுக்கு வந்தால் பிடித்து வைத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
முடிந்தால், அவர் வந்து எங்கள் நிர்வாகியைத் தொட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் நான் நேற்றே அவருக்கு சவால் கூட விடுத்திருக்கிறேன்.”
இதையும் படிங்க: “தவெக குதிரை பேரம் செய்ததால் தான் இடைத்தேர்தல்!” மதுராந்தகம், தாராபுரம் குறித்து பழனிசாமி அதிரடி!!