பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி யில் ஈடுபட்ட தவெக நிர்வாகி பள்ளி தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு.
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி யில் ஈடுபட்ட தவெக நிர்வாகி பள்ளி தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலாயுதம் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு முன் தலைமை ஆசிரியராக இருந்தவர் வேறொரு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு தலைமை ஆசிரியர் பொறுப்பை வேலாயுதம் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற நபர் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் தகாத முறை நடந்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியேற்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் மருத்துவர் குலாம் முகமது தவெக நிர்வாகி என்பதும், கூத்தாநல்லூர் பகுதியில் தனியார் கிளினிக் நடத்தி வருபவர் என்பதும் தெரியவந்தது. மருத்துவர் குலாம் கடந்த சில மாதங்களாகவே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக நோட்டீஸ்கள் ஓட்டுவதும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு எதிராக பரப்புரை செய்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறித்து பொதுமக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?
மேலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இவரது தொல்லைகள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்த பெண் தலைமை ஆசிரியர் மாற்றலாகி சென்ற பிறகு தற்போது வேலாயுதம் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி வசூலிப்பது தொடர்பாக தவெக நிர்வாகி மருத்துவர் குலாம் முகமது பள்ளி தலைமையாசிரியரிடம் எதற்காக பணம் வாங்குவீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மேஜையில் இருந்த பொருட்களை எடுத்து வீசியும் பள்ளி தலைமையாசிரியர் தாக்கவும் முற்பட்டார். இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக நிர்வாகி குலாம் முகமது என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக நிர்வாகி பெண் குழந்தைகள் பயிலும் பள்ளியில் அட்ராசிட்டி யில் ஈடுபட்ட செயல் பள்ளி மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு குலாம் முகமது என்பவர் தவெக கட்சியில் சேர்ந்து நான்கு மாதம் ஆகியுள்ளது அவருக்கு கட்சி சார்பில் எந்த பதவியும் வழங்கவில்லை தவெக கட்சியில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் பதவி கேட்டுள்ளதாக தகவல் எழுந்து வருகிறது ..
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!