×
 

விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்..! வன்முறை நிகழலாம்... உளவுத்துறை கடும் எச்சரிக்கை..!

விஜய் இன்னும் முதல்வராக பதவி ஏற்காத நிலையில் வன்முறை நிகழலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உளவுத்துறை.

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது.

இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இந்த சூழலில் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாருக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள், கூட்டணி முயற்சிகள் மற்றும் ஆதரவு தேடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சியை அமைக்காத நிலையில், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் உள்ளடி நடவடிக்கைகள், ஆதரவு பெறும் முயற்சிகள் ஆகியவை அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்த பரபரப்பான சூழலால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், போராட்டங்கள் அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளது.

இதையும் படிங்க: “திருமாவளவனை முதல்வராக்குங்க...” - திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த சிந்தனை செல்வன்...!

இதன் அடிப்படையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், அரசு அலுவலகங்கள், தலைவர்களின் இல்லங்கள், பொது இடங்கள் மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை தமிழக போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மெட்டல் டிடெக்டர்கள் பொருத்துதல், கூடுதல் போலீஸ் படைகள், சிசிடிவி கண்காணிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே சில இடங்களில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: விஜயை ஆட்சியமைக்க விடணும்..! சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share