#BREAKING: என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..!! மாஸாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..!!
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து விஜய் தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார்.
பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே என்று கூறி தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் தான் போட்டியிடும் தாய் போல இருக்கும் பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று மனதில் நினைத்ததாக விஜய் தெரிவித்தார். பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் அடிப்படை பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்ததாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது தீய சக்தி திமுக என்று கூறினார். உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினார். தீய சக்தி திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றும் நிம்மதியாக இருந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
வண்டி வண்டியாக இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உங்கள் அனைவரிடமும் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றும் எல்லாவற்றையும் நான் முன்பு சொன்னது போலவே வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர்கள் காதிலேயே விசில் ஊதி அனுப்புங்கள் என்றும் கூறினார். அவங்க செவிலில் விசில் ஊதி அனுப்புங்கள் என்று விஜய் தெரிவித்தார். எப்படி ஸ்மார்ட்டாக ஏமாற்றி நம்மிடம் கொள்ளையடித்தார்களோ அதே போல நாமும் ஸ்மார்ட் ஆக அவர்களை அனுப்பி விட வேண்டும் என்று தெரிவித்தார். எல்லா வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் எனவும் ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!
நான்குமுனை, 40 முனை என எத்தனை உருட்டு உருட்டினாலும் இங்கு இரண்டு முறை போட்டி தான் என்றும் ஒன்று TVK மற்றொன்று DMK என்று தெரிவித்தார். மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்காத ஸ்டாலின் சர்க்கரை தூக்கி எறியலாமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு, உங்கள் பிள்ளைக்கு வாக்களிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார். விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று விஜய் கேட்டுக் கொண்டார். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்றும் வெவ்வேறு வேட்பாளர்களை நிறுத்தினாலும், அந்த வேட்பாளரும், தானும் வேறு வேறு இல்லை என்று தெரிவித்தார். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.
இதையும் படிங்க: கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!