×
 

வங்கதேசத்துக்கும் வரியை குறைத்த அமெரிக்கா! இந்தியாவுக்கு ஆப்பா? ஜவுளி ஏற்றுமதி பாதிக்குமா? ஏற்றுமதியாளர்கள் கவலை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு பூஜ்ய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு இந்திய ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை பாதிக்குமா என ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் பல நாடுகளுடன் பரஸ்பர வரி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, வங்கதேசத்துடன் சில தினங்களுக்கு முன் மிக முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறைக்கு பெரும் சவாலாக அமையும் என்று ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு வங்கதேசத்தில் பூஜ்ய வரி (0%) விதிக்கப்படும். இதற்கு முன்பு வங்கதேசம் அமெரிக்காவில் இருந்து வரும் பருத்தி ஆடைகளுக்கு உயர் வரி விதித்து வந்தது. இப்போது வரி முழுமையாக நீக்கப்பட்டதால், அமெரிக்க பருத்தி ஆடைகள் வங்கதேச சந்தையில் மிகவும் மலிவாக கிடைக்கும்.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் அளவு மிக அதிகம். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஜவுளி தயாரிப்புகள் வங்கதேசத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. ஆனால் இப்போது அமெரிக்க பருத்தி ஆடைகள் பூஜ்ய வரியுடன் வருவதால், விலை போட்டியில் இந்திய பொருட்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், “வங்கதேசம் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜவுளி சந்தை. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், துணிகள், தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு இப்போது கடுமையான போட்டி ஏற்படும். இது ஏற்றுமதி அளவையும், வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்தத்தில் வங்கதேசம் அமெரிக்காவுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அமெரிக்க கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மருத்துவ சாதனங்கள், இயந்திரங்கள், எரிசக்தி பொருட்கள், சோயா சார்ந்த பொருட்கள் ஆகியவற்றுக்கு வங்கதேச சந்தையில் முன்னுரிமை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க பால் பொருட்கள், இறைச்சி வகைகள், கடல் உணவுகள், அரிசி, தானியங்கள் மீதான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாதாம் பருப்பு மீதான 53.60% வரி அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக பூஜ்யமாக்கப்படும்.

மேலும் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க கோதுமை, சோயா, சோளம் இறக்குமதி செய்யவும், அடுத்த 15 ஆண்டுகளில் 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி பொருட்களை வாங்கவும் வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஏற்றுமதி துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share