ஆட்சி அமைக்க ஆதரவு கொடுங்க... விசிகவுக்கு விஜய் அனுப்பிய கடிதம்... திருமா முடிவு என்ன?
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவை கோரியுள்ளனர்
சட்டசபைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக சார்பாக ஆதரவு கோரி விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு விஜய் கடிதம் அனுப்பி ஆதரவு கோரிய நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளுக்கு விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த
விசிக பொதுச்செயலர் எம்பி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியை கட்டாயம் படிக்க புதுச்சேரி மக்களிடம் திணித்துள்ளனர். மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்பதில்லை. இரு மொழி கொள்கையே சரியானது. பாஜக கூட்டணி அமைத்தபிறகு அவர்கள் அழுத்தத்துக்கு ரங்கசாமி பணிந்து, நம் மக்களின் மொழி உரிமையை விட்டு கொடுத்துள்ளார்.
மும்மொழி கொள்கையை அவர் ஏற்கும்போதே விசிக சுட்டிக்காட்டி கண்டித்தது. மும்மொழி கொள்கையில் 3வது மொழியாக பிரெஞ்சு இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம். மும்மொழி கொள்கை என்பதே இந்தி திணிப்பின் தந்திரம் என்பதை புதுச்சேரியில் பாஜக நிருபித்துள்ளது.
இதனால்தான் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என இதுவரை திமுக அரசு உறுதியாக இருந்தது. புதுச்சேரி அரசு அரசாணையை திரும்ப பெறவேண்டும். பிரெஞ்சு படிக்க ஏற்பாடு செய்து, இந்தி திணிக்கும் முயற்சிக்கு அரசு உடந்தையாக இருக்கக்கூடாது. இந்தியை திணித்தால் ஏற்க மாட்டோம்.
இதையும் படிங்க: தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!
காங்கிரஸ், இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவை விஜய் தலைமையிலான தவெக ஆதரவு கேட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கும், இந்த ஆதரவு கேட்ட கடிதம் வந்துள்ளது.
இது தொடர்பாக எங்கள் தலைவர் உரிய விளக்கம் அளிப்பார்கள். இதுவரை தவெக மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதியாக இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவை கோரியுள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? முடிவெடுக்கணும்..!! மறுக்காமல் நகர்ந்த திருமா.!