×
 

வேதாந்தா குழும நிறுவனின் மகன் உயிரிழப்பு..!! தந்தை செய்த உருக்கமான செயல்..!!

வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிரிழந்தார்.

உலகப் புகழ்பெற்ற வேதாந்தா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வால் தனது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) அமெரிக்காவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது தனது வாழ்வின் இருண்ட நாள் என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள அகர்வால், மகனின் நினைவாக தனது குடும்ப வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக நலன் மற்றும் ஏழை குழந்தைகளின் கல்வி, உடல்நலம் போன்றவற்றுக்கு செலவிடுவதாக உறுதியளித்துள்ளார். 

அக்னிவேஷ் அகர்வால், வேதாந்தா குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தவர். அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அவர், நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டு வரும் நிலையில் இருந்த போதிலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என அனில் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகனுக்கு முட்டுக்கட்டை..! படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது... போர்க்கொடி தூக்கிய ஜோதிமணி..!

"அக்னி 49 வயதுடையவர், ஆரோக்கியமாகவும், கனவுகளுடனும் இருந்தார். அவருடன் பகிர்ந்த நினைவுகள் அழியாதவை" என உருக்கமாகக் கூறியுள்ளார். அனில் அகர்வால், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். பீகாரில் பிறந்து, உலோகத் தொழிலில் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். 2014ஆம் ஆண்டே தனது குடும்ப சொத்தின் 75 சதவீதத்தை தொண்டுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்திருந்தார்.

இது பில் கேட்ஸ் போன்றோரின் தாக்கத்தால் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார். தற்போது மகனின் இழப்புக்குப் பிறகு, இந்த உறுதிமொழியை புதுப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்திய தொழில்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்னிவேஷ், தந்தையின் வழியில் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரது இழப்பு குடும்பத்துக்கு மட்டுமின்றி, வேதாந்தா குழுமத்துக்கும் பெரும் இழப்பு. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனில் அகர்வாலின் அனில் அகர்வால் அறக்கட்டளை ஏற்கெனவே இந்தியாவில் கல்வி, உடல்நலம், ஊட்டச்சத்து திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. 2021இல் இந்த அறக்கட்டளை பெரும் நிதி உதவிகளை அறிவித்தது. இந்த புதிய உறுதிமொழி, ஏழை குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகர்வாலின் இந்த முடிவு, பிற தொழிலதிபர்களுக்கும் உத்வேகமாக இருக்கும். இந்த சோக நிகழ்வு, வாழ்க்கையின் நிலையாமையை நினைவூட்டுகிறது.

அக்னிவேஷின் நினைவாக, அகர்வால் குடும்பம் சமூக சேவையில் மேலும் ஈடுபடும் என நம்பலாம். வேதாந்தா குழுமம், உலோகம், எண்ணெய், ஆற்றல் துறைகளில் உலக அளவில் செயல்படுகிறது. இந்த இழப்பு அவர்களின் செயல்பாடுகளை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜப்பானுக்கு இந்தந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை..!! சீனா அறிவிப்பு..!! தைவான் பதற்றத்தால் புதிய வர்த்தக யுத்தம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share