#BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!
விஜய் தான் கரூர் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றுள்ளார். டெல்லி போலீஸ் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது.
வெள்ளி நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற விஜய் லோத்தி பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். தாமதத்திற்கு என்ன காரணம், அனுமதி வழங்கப்பட்ட நேரம், கரூரில் என்ன நடந்தது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள், நிகழ்ச்சியை தொடர சொன்னது யார், காயமடைந்தவர்கள் பற்றி உடனடியாக தகவல் கிடைத்ததா உள்ளிட்டவை தொடர்பாக விஜயிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் சென்சார் பிரச்சனை... சுப்ரீம் கோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்..!