×
 

#BREAKING: விமான விபத்தின் கோரத் தாண்டவம்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்த சோகம்!!

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி விமான விபத்தில் உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சிக்னலை இழந்த நிலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 230 பேர் பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், 170 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

2016 முதல் 2021 வரை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி இருந்தார். 1971இல் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தனது அரசியல் பணியை தொடங்கியவர் விஜய் ரூபாணி பாஜகவில் பொதுச்செயலாளர் முதல் மாநில பாஜக தலைவர் வகித்தவர். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share