×
 

சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

வி.கே. சசிகலா அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக, சசிகலா தலைமையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் எனப் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா இன்று அறிவித்துள்ளார்.

நாளை, மார்ச் 18, 2026 (புதன்கிழமை) காலை 11:00 மணி முதல் மார்ச் 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் ஜெயலலிதா இல்லம் (95, போயஸ் கார்டன்) முகாம் அலுவலகத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 18-ஆம் தேதிக்கு பிறகு, மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பு சின்னத்துடன் களம் காணும் சசிகலா, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தையே தனது கட்சியின் கொள்கையாக அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் தனது கட்சி வேட்பாளர்களைக் களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

ஏற்கனவே அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு அம்மா விசுவாசிகள் மற்றும் தென் மாவட்ட வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரட்சித்தாய் சின்னம்மா என்று தனது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் சசிகலா, இந்தத் தேர்தலின் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share