தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!
ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் இவரது பெயர் குற்றவாளி என சேர்க்கப்பட்டுள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 19ம் தேதி, சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவுக்கு சென்றார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை சந்திக்கத் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரெண்டபல்லா கிராமத்திற்கு ஜெகன் மோகன் சென்ற வழியான எதுக்குரு பைபாஸ் முழுவதும் இவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி அவர் புறப்பட்டார். அப்போது அவரது கட்சியினர் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள், முண்டியடித்து ஜெகனை நெருங்க முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, செல்லி சிங்கையா என்ற தொண்டரும் ஜெகன்மோகனின் காரின் அருகில் சென்றார். அந்த சமயம், சிலர் அவரது காரின் மீது ஏறி அலப்பறை செய்தனர். அப்போது, கால் தவறி விழுந்த சிங்கையா கீழே விழுந்தார். இதனை யாரும் கவனிக்காத நிலையில், டிரைவரும் காரை முன்னோக்கி செலுத்தினார். சிங்கையாவின் தலையின் மீது ஜெகன் மோகன் ரெட்டி சென்ற கார் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பேரழிவு காத்திருக்கிறது... அமெரிக்கர்களுக்கு அதிரடி எச்சரிக்கை... அலறித்துடிக்கும் இஸ்ரேலியர்கள்...!
ஆனால், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தொண்டர்களை பார்த்து கையை அசைப்பதிலேயே மும்முராக இருந்தார். ஜெகன்மோகனின் கான்வாயில் வந்த ஏதோ ஒரு வாகனத்தில் சிக்கிதான் அவர் இறந்து இருக்க கூடும் என்று போலீசார் விசாரித்து வந்தனர். இச்சூழலில், ஜெகன்மோகனின் காரில் சிக்கிதான் சிங்கையா இறந்தார் என்பது தற்போது தெரியவந்தது. அது தொடர்பான வீடியோ வெளியானது.
அதில், கார் கதவை திறந்து நின்றபடி ஜெகன் வர ஆதரவாளர்கள் அவரை நோக்கி ஓடுகின்றனர். அப்போது தடுமாறி விழுந்த சிங்கையா மீது, ஜெகன் மோகன் காரின் முன்சக்கரம் ஏறி சென்றுள்ளது. இது தெரியாத ஜெகன் தமது ஆதரவாளர்களுக்கு உற்சாகமாக வணக்கம் சொல்லி கையசைத்து, கொண்டு இருக்கிறார்.
ஜெகன் மோகன் சென்ற காரை ஓட்டிய டிரைவர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் A1 ஆகவும், ஜெகன்மோகன் A2 ஆகவும் சேர்க்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. ஜெகன் முதல்வராக இருந்தபோது, அவரது சிறப்பு அதிகாரியாக இருந்த கிருஷ்ணமோகன் ரெட்டி பெயரில் கார் வாங்கப்பட்டு இருக்கிறது. ஓனர் என்ற முறையில் அவர் A3 ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து குண்டூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் (SP) எஸ் சதீஷ் குமார் கூறுவதாவது: சிங்கையாவிற்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உயிரிழந்தவரின் மனைவி சீலி லுர்து மேரி கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்தப் பின்னர், இந்த உயிரிழப்பு ஜெகன் மோகன் ரெட்டி காரினால் ஏற்பட்டது தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது டிரைவர் ரமணா ரெட்டி உள்ளிட்ட 6 பேரின் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின், பிரிவு 105 (உயிரிழப்பை ஏற்படுத்துதால் ஆனால் கொலை அல்ல) மற்றும் பிரிவு 49 (சம்பவத்திற்கு உதவும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கை' கீழ் புகார் பதியப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!