×
 

இனி பிரண்ட்ஷிப் தான்.. இறங்கி வரும் வங்கதேசம்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய யூனுஸ்..!

பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன் என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யுனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு, இந்தியா - வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் அவரது கட்சியான அவாமி லீக் தடை செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த வங்கதேச அரசு, தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த நிலையில் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. 

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. 1971, மாா்ச் 26-ஆம் தேதி பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற தினத்தை தேசிய தினமாக வங்கதேசம் கொண்டாடி வருகிறது. கடந்த மார்ச் மாதமும் வங்கதேச தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் வீழ்ச்சி.. பாகிஸ்தானில் ஏற்றம்! இதுல மட்டும் அவங்க முந்த முடியும்! எதுல தெரியுமா?

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;  வங்கதேச தேசிய தினம், இரு நாடுகளின் உறவுகளுக்கு அடித்தளம் அமைத்ததோடு நமது வரலாறு மற்றும் தியாகங்களுக்கு சான்றாகத் திகழ்கிறது. வங்கதேசத்தின் விடுதலைப் போராட்ட உணா்வு நமது இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. இது பல வழிகளில் இரு நாட்டு மக்களுக்குப் பலனளிக்கிறது.

அமைதி, ஸ்திரத்தன்மை, வளம், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை என வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமா் மோடி தெரிவித்து இருந்தார். இது இருதரப்பு உறவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேச மக்களுக்கும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஷ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். வங்கதேச இடைக்கால அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். 

தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது என கடிதத்தில் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share