×
 

3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

மேற்கு வங்கத்தில் உள்ள 142 தொகுதிகளுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. 

மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது தொடங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 142 தொகுதிகளுக்கும் தற்போது வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. 

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடக்கிறது. 142 தொகுதிகளுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது நடைபெறுகிறது.

மேற்குவாங்க மாநிலத்தினுடைய இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவாக கடந்த 23ம் தேதி நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளோடுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிக பதற்றமான வாக்குச்சாவடியாக இருக்கக்கூடிய மேற்கு மேற்குவங்கம் மற்றும் வடக்கு மேற்கு வங்க பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பையும் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினரையும் தேர்தல் ஆணையமானது கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்ற ஒரு வேண்டுகோளையும் தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கிறது. வாக்காளர்கள் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் அதே சமயம் எந்த ஒரு வன்முறைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.  இந்த இரண்டாம் கட்டு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தான் முக்கியமான அரசியல் பிரமுகர்கள்போட்டியிடுகிறார்கள். குறிப்பாக மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதிக்கும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பெரும்பாலான தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்பதால், அங்கு பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மட்டுமின்றி பிஎஸ்எஃப், எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பெருவாரியான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நந்திகிராம் மற்றும் பனாகரத் பகுதிகளில் 380 முதல் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலை பொறுத்தவரையில் சுமார் 400 கோடிக்கும் அதிகமான ரொக்க பணம், இலவசங்கள் அதுமட்டுமில்லாமல் மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share