×
 

உச்சக்கட்ட பதற்றம்... கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம்... சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்...!

மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை போலவே நேற்று மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி 3 முறை தொடர்ந்து முதல்வராகி உள்ளார். இப்போது 4வது முறையாக முதல்வராகும் முனைப்பில் தேர்தலை சந்திக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பிற்காக 2,450 கம்பெனி (சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: ஹுக்ளி நதிக்கரையில் ஒரு படகு பயணம்!! போட்டோ எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி! கங்கைக்கு நன்றி சொல்லி உருக்கம்!

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பூம் மாவட்டம், துப்ராஜ்பூர் தொகுதிக்குட்பட்ட கைராசோல் குமர் கிராமத்தில், தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட பதற்றம் வன்முறையாக மாறியது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, சிலர் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர்மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு போலீஸ் வாகனம் சேதமடைந்தது.
 

இதையும் படிங்க: ஓட்டுப்போடக் கூட கரூருக்கு செல்லாதா செந்தில்பாலாஜி! கோவையிலேயே ஐக்கியம் ஆனதின் பின்னணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share