கணவருக்கு செக்ஸ் மீது ஆர்வம் இல்லை... கோவில் கோவிலாக சுற்றுகிறார்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருமணம் என்பது ஒரு துணைக்கு மற்றொரு துணையின் தனிப்பட்ட நம்பிக்கைகளை, அது ஆன்மீகமாகவோ அல்லது வேறு எதாகவோ, கட்டுப்படுத்தும் உரிமையை வழங்காது.
"சமீபத்தில் நடந்த விவாகரத்து வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண், தனது கணவருக்கு பாலியல் மீது எந்த ஆர்வமும் இல்லை என்றும், அவர் கோயில்களுக்கும், ஆசிரமங்களுக்கும் மட்டுமே செல்வார். அவர் தன்னைப் போலவே என்னையும் ஆன்மீகவாதியாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை உறுதி செய்து, கணவன்-மனைவி இடையே விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், எம்பி ஸ்னெல்டா ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பில், "திருமணம் என்பது ஒரு துணைக்கு மற்றொரு துணையின் தனிப்பட்ட நம்பிக்கைகளை, அது ஆன்மீகமாகவோ அல்லது வேறு எதாகவோ, கட்டுப்படுத்தும் உரிமையை வழங்காது.
ஒரு மனைவியை ஆன்மீக வாழ்க்கை நடத்த கட்டாயப்படுத்துவது மனரீதியான கொடுமைக்குக் குறைவானதல்ல. இது குடும்ப வாழ்க்கையில் கணவருக்கு ஆர்வமின்மை, திருமண கடமைகளை நிறைவேற்ற இயலாமையைக் காட்டுகிறது என்று நீதிமன்றம் கூறியது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் கடற்கரையில் ஒதுங்கிய கடவுள் சிலை.. கடற் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை..
1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13(1) இன் கீழ் விவாகரத்துக்கு ஒரு காரணமான மன கொடுமை, கணவர் மனைவியை தனது திருமண வாழ்க்கையின்போது விபச்சாரம் செய்ய வைப்பதற்கு இணையானது என்று நீதிமன்றம் கூறியது. இந்த ஜோடி 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டது. இருப்பினும், அதன் பிறகு திருமணத்தில் பதட்டங்கள் ஏற்பட்டன. கணவரின் அதிகப்படியான மத நடைமுறைகளால் இவை அனைத்தும் நடந்ததாக மனைவி கூறினார்.
தனது கணவருக்கு உடலுறவு கொள்வதிலோ, குழந்தைகள் பெறுவதிலோ எந்த ஆர்வமும் இல்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பிய பிறகு, அவர் கோயில், ஆசிரமத்திற்கு மட்டுமே செல்வார். கணவர் இதில் ஆர்வம் காட்டினார். அதே நேரத்தில், அவர் தனது மனைவியையும் அப்படிச் செய்ய முயன்றார். மனைவிக்கு படிக்கவும் தடை விதித்துள்ளார். அந்தப் பெண் முதலில் 2019-ல் விவாகரத்து கோரி அணுகினார். ஆனால் பின்னர் அவரது கணவர் தனது நடத்தையை மாற்றுவதாக உறுதியளித்த பின்னர் மனுவை வாபஸ் பெற்றார்.
இதற்குப் பிறகு மனைவி மீண்டும் 2022-ல் விவாகரத்து கோரி வந்தார் மனைவி. தனது கணவரின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார். குடும்ப நீதிமன்றம் இந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டு அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்துக்கு வழங்கியது. பின்னர் கணவர் தனது ஆன்மீக நடைமுறைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார். முதுகலைப் படிப்பை முடிப்பதற்கு முன்பு மனைவியே குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இருப்பினும், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம் அந்தப் பெண்ணின் விவாகரத்து உத்தரவை உறுதி செய்தது.வ்
இதையும் படிங்க: என்னங்கடா வித்தை காட்டுறீங்க..? துர்கா ஸ்டாலின் இனி எத்தனை கோயிலுக்கு போனாலும் சரியாகாது: ஹெச்.ராஜா