×
 

நிதிச் சுமையை காரணம் காட்டும் அரசு..! அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் சிதம்பரம் அருகே அமைந்துள்ள ஒரு பழமையான மற்றும் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1929ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் தனியார் தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பவரால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், அவரது பெயரையே தாங்கியுள்ளது. 

இப்பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் பல்கலை, முதுகலை, ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. கலை, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம், கல்வியியல், இந்திய மொழிகள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்புகள் உள்ளன. குறிப்பாக இயற்கை மருத்துவம், யோகா, தொழிற்சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு போன்ற தனித்துவமான பாடத்திட்டங்களையும் இங்கு காணலாம்.

மருத்துவப் பிரிவில் MBBS, BDS, B.Pharm உள்ளிட்ட படிப்புகளும், பொறியியல் பிரிவில் பல்வேறு B.E., B.Tech நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான பங்களிப்பு அதன் தொலைதூரக் கல்வி இயக்ககமாகும். 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்ககம், இந்தியாவிலேயே தொலைதூரக் கல்வியில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: திருவள்ளூரில் நிகழ்ந்த கொடூரம்... இருவர் அடித்தே கொலை.. அதிரவைக்கும் காட்சிகள்..!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 27ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிதிச் சுமை காரணமாக 2013ஆம் ஆண்டு முதல் பணப்பலன், பதவி உயர்வு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: நிலைமை சரியில்ல...! ஈரானிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share