×
 

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்.. பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.

நேற்று இரவு முதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அது மட்டும் அல்ல அது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வான்வெளியிலேயே இந்திய ராணுவம் முறியடித்தது. இதனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். 

இதையும் படிங்க: ஆபரேஷன் செந்தூர்; பெண்களுக்கு குங்குமச்சிமிழ் கொடுத்து கொண்டாடிய பாஜக தலைவி! 

இவர் ஆந்திராவில் உள்ள சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பாகிஸ்தான் உடனான ட்ரோன் தாக்குதலில் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: போர் பதற்றம்.. தன்னை சந்திக்க வர வேண்டாம்..! கழகத் தொண்டர்களுக்கு இபிஎஸ் அன்பு கட்டளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share