×
 

BANK மேனேஜருக்கு பளார்..! என்ன நடந்துச்சு..? மு.க. அழகிரி மகளிடம் போலீஸ் விசாரணை..!

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக மு.க அழகிரி மகள் கயல்விழியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மு.க. அழகிரி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் இரண்டாவது மகன் என்ற அடையாளத்துடன், மதுரை அரசியலின் வலிமைமிக்க தலைவராக உருவெடுத்த அவரது மூத்த மகள் கயல்விழி அழகிரி. கலைஞர் குடும்பத்தின் பேரக்குழந்தையாகப் பிறந்த அவர், அரசியல் பின்னணியுடன் வளர்ந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பப் பாசத்தையும், சமூக ஈடுபாட்டையும் சமநிலைப்படுத்தி வருபவர். கயல்விழி, அழகிரியின் மனைவி காந்தி அழகிரியின் மூத்த மகள். 

தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு, தலைமைச் செயலகம் வருகை, முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட புதிய அரசியல் சூழலில் ஈடுபாடு காட்டும் வாய்ப்புகள், மதுரை மேயர் பதவி உள்ளிட்ட ஊகங்கள் அவரைச் சுற்றி எழுந்துள்ளன. மதுரைப் பகுதியில் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்கும் திசையில் அவர் நகர்வதாகத் தெரிகிறது. 

இந்த நிலையில், அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கியின் லிப்ட் பழுது தொடர்பாக பேச வந்திருந்த கயல்விழி வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து எஸ்பிஐ வங்கி முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரியின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கயல்விழி மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதையும் படிங்க: பச்சையப்பாஸ் மாணவர்கள் மீது வெறியாட்டம்..! சென்ட்ரல் மெட்ரோவில் பரபரப்பு..! நயினார் சரமாரி விமர்சனம்..!

இந்த நிலையில், வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக தற்போது போலீசார் கயல்விழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாறு எஸ்பிஐ மேலாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் அந்த எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் லிஃப்ட் இயங்கவில்லை என்று வங்கி மேலாளர் புகார் கூறியதால் கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? நெல்லை பல்கலைக்கழக நிகழ்வுக்கு சிபிஎம் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share