×
 

இளசுகளின் அட்டகாசம்! அனல் பறக்க பைக் ரேஸ்... துரத்தி துரத்தி வெளுத்த போலீஸ்...!

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் துரத்திப் பிடித்து வெளுத்து வாங்கினர்.

சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடத்துவது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆபத்தான போக்காக உருவெடுத்துள்ளது. இந்த செயல், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. 

சாலைகளில் ஆபத்தான பைக் ரேஸ் என்பது, பொதுவாக நகர்ப்புறங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, ஒருவரையொருவர் பந்தயத்தில் வெல்ல நினைக்கின்றனர். இதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் விதிகளை மீறி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணித்து, தங்களது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர். பெரும்பாலான இந்த ரேஸ்கள் இரவு நேரங்களில் அல்லது வாகன நெரிசல் குறைவாக இருக்கும் இடங்களில் நடைபெறுகின்றன. 

இந்த ஆபத்தான பைக் ரேஸ்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை. அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றாதது ஆகியவை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இவை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. ஒரு சிறிய தவறு கூட பெரிய விபத்தாக மாறி, பல உயிர்களைப் பறிக்கின்றன. 

இதையும் படிங்க: ப்ளீஸ்... தயவு செஞ்சு பூசணிக்காய் உடைக்காதீங்க... சென்னை போலீஸ் வேண்டுகோள்..!

இந்த நிலையில் சென்னை வடபழனி மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்து வெளுத்து வாங்கினர். போலீசார் தடுத்து நிறுத்தியதும் வாகனத்தை திருப்பிக்கொண்டு ஓட முயன்றனர். அந்த இளைஞர்களை போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற போது ஒருவர் சென்டர் மீடியனை தாண்டி ஓடிவிட்டார். மற்றொரு இளைஞரையும் அவர் வைத்திருந்த பைக்கையும் போலீசார் பிடித்தனர். இதே போல் பைக் ரேஸ் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் வெளுத்து வாங்கினர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு தான் எப்பவுமே பாதுகாப்பு! வட இந்தியர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share