×
 

எங்கப்பா ஆள காணோம்..!! போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன் மிஸ்ஸிங்..!! கிண்டலடிக்கும் பாஜக!!

ஆனால் அவர் வரவில்லை எனப் பயணிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்தனர். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் அதையொட்டிய மூன்று நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

குடும்பத்துடன் வந்த பலர் மணிக்கணக்காகக் காத்திருந்தனர். முன்பதிவு செய்த பல பயணிகளின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்றுப் பேருந்துகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால், ஆம்னி பேருந்துகளை நம்பியிருந்தவர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவற்றைப் பயன்படுத்துவதாகவும் தெரிகிறது. இயல்பான கட்டணத்தை விடப் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பது தொடர்கதையாகிவிட்டது எனப் பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

இந்தப் பிரச்சினை முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரடியாகக் களத்தில் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் வரவில்லை எனப் பயணிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்தனர். 

முன்னர் அவர் கிளாம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டபோது ஏற்பட்ட சம்பவங்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில், இந்த முறை அவர் வராதது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்டு, “கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறை அமைச்சரைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் கமெண்ட் செக்ஷனில் சொல்லுங்கள்” எனக் கிண்டலாகக் கேட்டிருந்தது. 

இதற்கு நெட்டிசன்கள் பலரும் அமைச்சரைக் குறிவைத்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்தனர். அரசுத் தரப்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கானோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், களத்தில் ஏற்பட்ட நெரிசலும் ஆம்னி கட்டண உயர்வும் பயணிகளின் அதிருப்தியை அதிகரித்துள்ளன. பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற அவதி மீண்டும் ஏற்படாமல் தடுக்க, போதிய அரசுப் பேருந்துகள் மற்றும் கண்காணிப்பு அவசியம் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 

இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share