முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?
இன்று அரசியலிலும் புதிய வரலாற்றை உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விஜய். திரையுலகில் பல சாதனைகளை படைத்த அவர், இன்று அரசியலிலும் புதிய வரலாற்றை உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய விஜய், மக்களின் பேராதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மக்கள் நலன், நிர்வாக சீர்திருத்தம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளின் போது வழக்கமாக அவர்களது ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்துவது, அன்னதானம் வழங்குவது, கல்வி உதவித்தொகை கொடுப்பது உள்ளிட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குவார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேக் வெட்டியும், பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் தளபதி விஜய் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க: சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற மக்கள் சேவைப் பணிகளில் ஈடுபட தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாம்களையும் தவெகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த முறை விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பிறந்தநாளை கொண்டாடவுள்ளது அனைத்து தரப்பு மக்களையும் ஆவலுடன் எதிர்நோக்க வைத்துள்ளது. குறிப்பாக தவெக தலைமையிலான அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வேறு நடந்து வருவதால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் 60 வயதுக்குட்பட்ட மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவது, அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குதல், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்தின்போது ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டுப்புடவை வழங்குவது, வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம், தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் போன்ற முக்கிய அறிவிப்புகளை விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!