நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் மற்றும் மின் வணிகத் தளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
12-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் மற்றும் மின் வணிகத் தளத்தை (E-Commerce Platform) மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கிவைத்தார்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தயாரிப்புகளை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், முதலில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கைத்தறித் துறைப் பொருட்களின் பிரமாண்டக் கண்காட்சியை நாடாவெட்டித் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் தொடக்கம்: பாரம்பரிய கைத்தறி ஆடைகளை நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியான 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்களை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
உலகெங்கிலும் வாழும் தமிழர்களும், கைத்தறிப் பிரியர்களும் எளிதாக நெசவாளர்களின் தயாரிப்புகளை இணைய வழியில் வாங்கும் வகையில் புதிய டிஜிட்டல் மின் வணிகத் தளத்தையும் முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
பாரம்பரியத் தொழிலைப் பாதுகாத்து, புதிய ரகங்களை உருவாக்கும் மாநில அளவிலான சிறந்த நெசவாளர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பளர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ரொக்கப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கி முதலமைச்சர் கெளரவித்தார்.
நெசவாளர் சமூகத்தின் பொருளாதாரத்தைச் உயர்த்தவும், நவீனச் சந்தைக்கு ஏற்பக் கைத்தறிப் பொருட்களை உலகளவில் பிரபலப்படுத்தவும் 'வெற்றித் தறி' திட்டம் மாபெரும் மைல்கல்லாக அமையும் எனக் கைத்தறித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!