×
 

"பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையின் நிரூபிக்க நாளை சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கிய தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள விஜய், ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு ஹங் அசெம்பிளியாக மாறியது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. தவெகவுக்கு மட்டும் 108 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ, சிபிஐ(எம்), விசிக (2), ஐயூஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று 120-க்கும் மேல் எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதி செய்தார் முதல்வர் விஜய்.

இதனைத் தொடர்ந்து மே 10-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 தவெக அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தபோதே, பெரும்பான்மையை சட்டமன்றத் தளத்தில் நிரூபிக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையும் படிங்க: சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த நிலையில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாளை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக ஆட்சியைப் பிடிச்சாச்சு..! முதல்வர் விஜய் வைகோவை சிந்திக்க திட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share