விஜயுடன் கூட்டணி வைக்கும் நிலை வராது... எதிர்பாராத இடத்தில் இருந்து தவெகவிற்கு வந்த பதிலடி...!
இந்தத் தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தலாகவும், வித்தியாசமான ஒரு தேர்தலாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் வெல்லப் போவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையே.
விஜய் ஒரு 100 தொகுதிக்கு 15,000 வாக்குகள் வாங்குவார். அடுத்து ஒரு 100 தொகுதிக்கு ஒரு 25-30 போவார். ஒரு 40-50 தொகுதியில செகண்ட் (Second) வரலாம். ஒரு பல தொகுதிகளில், ஒரு சில தொகுதிகளில் ஜெயிக்கலாம் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பூத் ஏஜென்ட்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் அவனியாபுரத்தில் உள்ள அசல் மலபார் பீடி திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சியின் தலைவரும், அதிமுக கூட்டணியின் முக்கிய தலைவருமான திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக இயக்குனர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சூழலில் எண்ணிக்கையின் போது பூத் ஏஜென்ட்களின் பணிகளைத் திட்டமிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் கூறுகையில்: நாளை மறுதினம் தமிழகத்தினுடைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற முடிவை மக்கள் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதனுடைய முடிவுகள் ஒரு 12 மணியிலிருந்து 1 மணி வரை வெளியாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற, தமிழகத்திற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற நம்முடைய எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராவது நிச்சயமான ஒன்று என்று மக்களுடைய கருத்து வெளிவந்திருக்கிறது. எனவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தமிழகத்திலே வரவிருக்கிறது.
மதுரைத் தொகுதியைப் பொறுத்தவரை புதிய நீதிக்கட்சியின் சார்பில் நம்முடைய இயக்குநர் சுந்தர் சி அவர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். மதுரையில் இருக்கின்ற 10 சட்டமன்றத் தொகுதிகளும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதிலே சுந்தர் சி அவர்கள் மத்தியத் தொகுதியிலே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம். மக்கள் அதற்குத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
பிரச்சாரத்திற்கு வெளியே வராத விஜய் கோவில்களுக்கு செல்வதற்கு வருவது குறித்த கேள்விக்கு, அவர் அவர்களுடைய சொந்த விருப்பம். யார் வேண்டுமானாலும் எந்த ஆலயத்திற்கும் போகக்கூடிய வாய்ப்பு தமிழகத்திலே மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள், ஆலயங்களும் கொடுத்திருக்கின்றன. எனவே அவர் போவது அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.
அதிமுக பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் விஜயுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு, அதுபோன்ற ஒரு வாய்ப்பு நிச்சயமாக வராது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் எடப்பாடியார் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்பார்கள், அது நிச்சயமான ஒன்று.
அதிலே உங்களுடைய எதிர்பார்ப்பு ஒன்று, தமிழக வெற்றி கழக கட்சியினுடைய தலைவர் விஜய் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை வாங்குவார் என்ற செய்தி இப்போது வலுவாகப் பேசப்படுகிறது. எனவே அதிக வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்பு விஜய்க்கும் உண்டு.
எக்ஸிட் போல்ஸ் (Exit polls) பற்றிய கேள்விக்கு, எக்ஸிட் போல் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதைப் பண்ண முடியும். இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகள் பாதி ஆளும் கட்சிக்குச் சாதகமா இருக்கும். மொத்தத்துல யாருமே கணக்கிட முடியாத அளவுக்கு இந்தத் தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தலாகவும், வித்தியாசமான ஒரு தேர்தலாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் வெல்லப் போவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையே.
தேர்தலுக்குப் பிறகு கமர்சியல் சிலிண்டர் விலை உயர்வு பற்றிய கேள்விக்கு, உலகமே இந்தப் பிரச்சினையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும். இதிலே இத்தனை நாள் விலை ஏற்றாமல் மத்திய அரசு, நம்முடைய நரேந்திர மோடிஜியினுடைய அரசு 10 ரூபாயை இறக்கியிருக்கிறார்கள். சிலிண்டருக்கு விலை ஏறியிருக்கிறது, அது கட்டுப்பாடு வந்து... 10 கப்பல்கள் வரவேண்டிய இடத்திலே 2 கப்பல்கள் வரும்போது பகிர்வு (Distribution) பிரச்சினை இருக்கிறது.
எனவே இதிலே ஒரு எமர்ஜென்சி காலம் என்று கூட நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். அது விரைவில் சரியாகப் போகும். அமெரிக்க அதிபர் கூட சொல்லியிருக்கிறார்கள், விரைவில் விலை இறங்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். போர் ஒரு முடிவுக்கு வரக்கூடிய அளவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்லா நாட்டுத் தலைவரோடும் பேசிக் கொண்டிருக்கிறார்
விஜய் அதிக வாக்குகள் பெறுவார் பற்றிய கேள்விக்கு, எதிர்பார்த்ததை விட, எல்லாரும் 10,000, 15,000 ஒரு தொகுதிக்கு வாங்குவார்னு இருந்தாங்க. அதுபோல ஒரு 100 தொகுதிக்கு 15,000 வாக்குகள் வாங்குவார். அடுத்து ஒரு 100 தொகுதிக்கு ஒரு 25-30 போவார். ஒரு 40-50 தொகுதியில செகண்ட் (Second) வரலாம். ஒரு பல தொகுதிகளில், ஒரு சில தொகுதிகளில் ஜெயிக்கலாம்.
புதிதாக வந்த கட்சியால் ஏற்கனவே இருக்கும் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்குமா என்ற கேள்விக்கு, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை 40,000, 80,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தியெல்லாம் இருக்காது. யார் வெற்றி பெற்றாலும் 3,000, 5,000, 10,000-குள்ள தான் இருக்கும்.
மதுரை மத்திய தொகுதி வெற்றி வாய்ப்பு பற்றிய கேள்விக்கு, மதுரை மாவட்டத்திலே 10 தொகுதியும் வெற்றி பெறும் மதுரையைச் சுற்றி. அதுவும் சுந்தர் சி அவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற கேள்விக்கு, இருக்கிற 10 தொகுதியில வெற்றி பெறக்கூடிய இதுல சுந்தர் சி அதிக ஓட்டு வாங்குவார் என்றார்.
இதையும் படிங்க: அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!