×
 

ED வளையத்திற்குள் புதிதாக 3 திமுக அமைச்சர்கள்... திமுகவை சுத்துப்போட்டு கட்டிப்போட பார்க்கும் பாஜக...!

தற்போது இந்த லிஸ்டில் புதிதாக மூன்று அமைச்சர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், ஐ பெரியசாமி என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி இருக்கு நிலையில், தற்போது இந்த லிஸ்டில் புதிதாக மூன்று அமைச்சர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக தொடர்ந்து திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் முன்னாள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் என அனைவரின் பழைய ஃபைல்களை எல்லாம் தோண்டி எடுத்து நடவடிக்கை மேற்கொண்டது அமலாக்கத்ததுறை. இதனை எடுத்து தற்போது 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது அமலாக்கத்ததுறை. அதன்படி சில நாட்களுக்கு முன் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான மற்றும் அவரது மகன் மற்றும் மகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டது. 

14 ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்ந்த வழக்கை தற்போது கிளறி எடுத்து ஆக்ஷனில் இறங்கியுள்ளது அமலாக்கத்ததுறை. தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் ஓர் உத்திதான் இது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்நிலையில்தான் இந்த லிஸ்ட் இதோடு நிற்க போவதில்லை எனவும் திமுகவில் படு ஆக்டிவவாக செயல்பட்டு வரும் மூன்று அமைச்சர்களின் பெயரும் அமலாக்கத்துறையின் நெக்ஸ்ட் டார்கெட் லிஸ்டில் இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் தில்லுமுல்லு... திமுக மா.செ.க்களை காய்ச்சி எடுத்த மு.க.ஸ்டாலின்..!

அதன்படி நகராட்சி நிர்வாகத்ததுறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தான் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜக அரசு அமலாக்கத்ததுறையை எதிர்கட்சியினரை நெருக்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்ததுறையின் நடவடிக்கைகள் தீவிரமடைவதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக தேர்தல் சமயத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந் கெஜரிவாளின் கைது, ஜார்க்கனண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கைது ஆகியவை நடத்தப்பட்டது. 

மேலும் இதன் விளைவாக டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியுற்றதோடு, பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால் ஜார்க்கண்டில் மாஸ்டர் பிளான் எதுவும் வர்க்அவுட் ஆகவில்லை. மீண்டும் ஹேமன் சோரனே வெற்றி பெற்றார். அதுபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாஜகவின் ED கேமில் இருந்து மீண்டு மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருவதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இதையும் படிங்க: அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பு முத்தங்கள்! பெற்றோரின் திருமண நாளில் உதயநிதி உருக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share