55 ஆண்டு கால வரலாற்றிலேயே முதல் முறை... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?
22 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது முட்டை பிரியர்களை ஷாக் ஆக்கியுள்ளது
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.15 ஆக நிர்ணயம். 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை.
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6.10 ல் இருந்து 5 காசுகள் உயர்த்தி 6 ரூபாய் 15 காசுகளாக ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (12-12-2025) மாலை அறிவித்துள்ளது.
இந்த விலை நாளை (13-12-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 6.15 ஆக நிர்ணயக்கப்பட்டுளதால் 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026ம் ஆண்டுக்கான ரேசன் கடை விடுமுறை நாட்கள் வெளியீடு!
கடந்த 22 நாட்களாக முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நீடித்து வந்தது.
இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி ரூ.6.15 ஆக நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.
முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. வழக்கமாக குளிர்காலம் தொடங்கியவுடனே விலை உயர்வது வாடிக்கையான ஒன்று. இதுவே விலை முட்டை விலை உயர்வு க்கு காரணம் மேலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் பண்ணையாளர்கள்.
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!