கை காட்டுனாராம்... வைரல் ஆச்சாம்..! இவரெல்லாம் முதல்வர்... சிவகங்கை தாக்குதல் சம்பவத்தால் கொந்தளித்த இபிஎஸ்..!!
சிவகங்கை சம்பவத்தை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது என்பதை சுட்டி காட்டினார்.
அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன என்று கேட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே என்று சாடினார்.
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை என்றும் தெரிவித்தார். பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் “சமூக அநீதி திமுக அரசு” இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நடிகை லதா EPS முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்..!!
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா என்றும் தான் காட்டிய சைகை வைரலாகியதாக வெட்டிப் பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது., பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது., சமூகநீதி முடிந்துவிட்டது., மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது என்றும் இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் எனவும் கூறினார். அதை மிக விரைவில் தமிழக மக்கள் சிறப்பாக செய்ய காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி,இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!