×
 

தொடரும் இலங்கை கடற்படையின் கைது... மீனவர்களை திரட்டி போராட்டம்..! செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டுகொள்ளாத பாஜகவை கண்டித்து மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது என்றும் மத்திய பாஜக அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு எத்தனைமுறை கூறினாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார்.

மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய செல்வப் பெருந்தகை, மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் ARREST... தொடர்கதையாகும் கைது நடவடிக்கை... அதிருப்தி...!

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share