×
 

விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

ஒரே PNR-ல் பயணிக்கும் பயணிகள் அருகருகே உள்ள இருக்கைகளில் அமர்த்தப்பட வேண்டும் என புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.

விமான பயணிகளிடம் இருக்கை தேர்வு என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விமான நிறுவனங்களின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்  இன்று அதிரடியான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஒரு விமானத்தில் உள்ள மொத்த இருக்கைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத (60%) இருக்கைகளுக்கு எவ்விதமான இருக்கை தேர்வு கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை இந்தக் குறிப்பிட்ட சதவீதத்திற்குள் இலவசமாகத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். குடும்பமாகவோ அல்லது நண்பர்களாகவோ ஒரே PNR எண்ணின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அருகருகே உள்ள இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இணையவழியில் செக்-இன் செய்யும் போது அனைத்து இருக்கைகளுமே கட்டண இருக்கைகள்  எனக் காட்டி பயணிகளைப் பணம் செலுத்தத் தூண்டும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் கோரப்படக்கூடாது.

இதையும் படிங்க: அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

கடந்த சில மாதங்களாக, விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 90 சதவீத இருக்கைகளைக் கட்டண இருக்கைகளாக மாற்றியிருப்பதாகப் பயணிகள் தரப்பிலிருந்து ஏராளமான புகார்கள் குவிந்தன. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு வரிசைகளில் அமர்த்தப்படுவதைத் தவிர்க்கக் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவியது. இந்தச் சுரண்டலைத் தடுக்கவே மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை குளுகுளுவென மாற்றப்போகும் மழை..!! உஷார் மக்களே..!! வானிலை அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share