×
 

வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

இந்தியாவில் சிலிண்டர் விலை உயராமல் கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், விடிந்ததுமே பேரதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக உலகின் முதன்மையான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியா அதன் மொத்த எல்பிஜி எரிவாயு தேவைகளில் தோராயமாக 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதாவது, சர்வதேச விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அல்லது கடல் வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள் நாட்டின் விநியோகத்தை பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், புரோபேன் - பியூட்டேன் பெட்ரோ கெமிக்கல் தொழிலுக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டப்பட்டிருந்தது. மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி வீட்டு நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் சிலிண்டர் விலை உயராமல் கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், விடிந்ததுமே பேரதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 

ஈரான் இஸ்ரேல் போரால் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்திருக்கிறது.  வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 115 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் அதிகரித்து, 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு...!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்ந்து 2,043.50க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபாயை கடந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி 30 ரூபாய் அதிகரித்த நிலையில், தற்போது 115 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

கேஸ் சிலிண்டர் விலை உயர் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 100.84 ரூபாய்க்கும், டீசல் 92,39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

இதையும் படிங்க: “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share