×
 

மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

நாகையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் நான்கு வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதே அச்சமூட்டும் வகையில் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.

பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதன் தாக்கம் குறைவதற்குள் அடுத்தடுத்த குற்றங்கள் நிகழ்கின்றன.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாகையில் நான் வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியலம்மா... மகளின் தலையில் சிசிடிவி வைத்த தந்தை... வைரலாகும் வீடியோ..!!

நாகை அருகே 4 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டிடத் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ வழக்கின் கீழ்  கைது செய்யப்பட்டு உள்ளார். சிறார்கள் பாலியல் ரீதியில் அச்சுறுத்தப்படும் கொடூரம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சந்தை சிரிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share