#BREAKING: karur stampede... தவெக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...!
முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு வந்தது. பொதுநல மனுக்களுக்கு சாதகமாக கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் எனவும் தெரிவித்து சிபிஐ விசாரணை கேட்ட அனைத்து பொது நலமான மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
முன்ஜாமின் கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த கட்சி தொண்டர்களை கொலை செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. தாமதமாக வந்தது குற்றமா எனவும் கேட்கப்பட்டது. விஜயை பார்க்கக் கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் போலீஸ் மீது பழி போடவில்லை குற்றம்தான் சுமத்துகிறோம் என்று கூறப்பட்டது.
வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும் என்றும் எங்குமே போலீசார் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... அதிரடி காட்டும் போலீஸ்... முந்திக்கொண்ட தவெக முக்கிய தலைகள்...!
தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் முன்ஜாமின் கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளனர். இருவரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பேசி முடிக்கிறீங்களா... கோர்ட்டுக்கு வரீங்களா? சீமான் - விஜயலட்சுமியை எச்சரித்த நீதிமன்றம்…!