×
 

இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

நாட்டிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் போடப்பட்ட இசைச் சாலையை பார்க்கவும், அதை கடக்கையில் வரும் இசை ஒலியை கேட்டு ரசிக்கவும் பலர் அச்சாலை நோக்கி படையெடுத்துள்ளனர்.

மும்பையின் நரிமன் பாயிண்ட் முதல் வோர்லி வரையிலான அழகிய கடற்கரை சாலையில், நாட்டின் முதல் இசை சாலை (Musical Road) சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் செலவில் 500 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்த சாலையில், குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு இசைப் பட்டைகள் (musical strips) பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் 70-80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, இந்த பட்டைகள் மீது டயர்கள் உரசுவதால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் பிரபல பாடலான "ஜெய் ஹோ" மெட்டு தெளிவாக ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அமைப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இசை சாலையை பார்க்கவும், அதை கடக்கும்போது பாடல் ஒலிப்பதை ரசிக்கவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் அங்கு படையெடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி, இந்த சாலை சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஆனால் இதனால் ஏற்கனவே பிசியான இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!

இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இது பெரும் தொல்லையாக மாறியுள்ளது. அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே அதிக போக்குவரத்து உள்ள சாலை. இப்போது இசை சாலை ஆனதால் கூடுதல் வாகனங்கள் வந்து செல்கின்றன.

 

 

View this post on Instagram

A post shared by J.BalVaibhav (@thebalvaibhav)

தொடர்ந்து 'ஜெய் ஹோ' பாடல் ஒலிப்பதால் வீடுகளின் ஜன்னல்களை திறக்க முடியவில்லை. காற்றோட்டம் இல்லாமல் போய்விட்டது. குழந்தைகள் படிக்க முடியவில்லை, முதியோர் ஓய்வெடுக்க முடியவில்லை. இது இரைச்சலாக மாறியுள்ளது" என்று புகார் தெரிவித்துள்ளனர்.

இசை சாலை அமைக்கப்பட்டதன் நோக்கம், வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைத்து, இனிமையான பயண அனுபவம் தருவதுதான். ஆனால் தற்போது அது குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இசைப் பட்டைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குடியிருப்பாளர்களின் புகாரை பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண ஆலோசனை நடைபெறும்" என்றனர். இந்த இசை சாலை மகிழ்ச்சியைத் தர வேண்டிய இடத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. ரசிகர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாடு மும்பை மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது!

இதையும் படிங்க: ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share