×
 

அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

நாகர்கோவில் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாகர்கோவில் நகராட்சி பொறுப்பு மேயரான மேரி பிரின்சி லதா மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் வாக்குச்சாவடி பதிவேட்டில் கையெழுத்திட்டதாக இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2026 ஏப்ரல் முதல் வாரத்தில், முன்னாள் மேயர் மகேஷ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து துணை மேயராக இருந்த நிலையில் பொறுப்பு மேயராக மேரி பிரின்சி லதா நியமிக்கப்பட்டார்.

மகேஷ், திமுகவைச் சேர்ந்தவர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றவர். அவர் 2026 ஏப்ரல் தொடக்கத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்ததால் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராகப் பொறுப்பேற்றார். 

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினமே எந்த கட்சி ஆட்சி அமைக்கிறது என்பது தெரியவரும். இந்த நிலையில் நாகர்கோவில் நகராட்சி பொறுப்பு மேயராக இருக்கும் மேரி பிரின்சி லதா மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... நாகர்கோவில் மேயர் மகேஷ் திடீர் ராஜினாமா..!

பொறுப்பு மேயராக இருக்கும் மேரி பிரின்சி லதாவிற்கு அதிகாரம் இல்லாத நிலையில் வாக்குச்சாவடி பதிவீட்டில் கையெழுத்திட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜாக்கமங்கலம், வடசேரி ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு என்றாலே சாதனை தான்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share