இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!
அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை அமைச்சர் ராஜ்மோகன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது என்று தெரிவித்தார்.
“அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர்.
அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள் என்றும் அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!
காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி என்றார். நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன என்றும் ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, விஜய் அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: எப்போ ரூ.2,500..? சொன்னதை செய்த பாஜக..! பெண்களை ஏமாற்றிய தவெக..! L.முருகன் விளாசல்..!!