×
 

கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், 

மின்சாரத்துறையில் நடைபெறும் ஊழல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கரூராக இருந்தாலும் சரி, கோவையாக இருந்தாலும் சரி, யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மின்சாரத்துறை ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது என்றார். மின்சாரத்துறை லாபகரமாக செயல்பட்டு இருந்தது என்றும் கடந்த 20 ஆண்டுகளாக மின்சாரத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை என்றும் போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது என்றார். இதில் தனிநபர்கள் மீது தவறு இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

மக்களுக்கு தடையற்ற, நம்பகமான மின்விநியோகத்தை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் நிர்மல் குமார், முழுமையாக சீரான மின்சாரம் வழங்க சில நாட்கள் தேவைப்படுகிறது, பல இடங்களில் பிரச்சனை உள்ளது என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share