×
 

திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

தற்காலிகமாக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்து விடக்கூடாது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய சீமான் கூறியதாவது: புரட்சியவாதிகள் நாங்கள். புதிய சமூகம் படைப்பது தான் எங்கள் நோக்கம். இங்கு விளம்பர அரசியல் உள்ளது. சேவை அரசியல் இல்லை. எங்கள் இலக்கு எங்கள் நல்லாட்சி. புதிய தேசம் செய்வோம். கொள்கையில் தெளிவு குழப்பம் இல்லா முடிவு. ஒரு அரசியல் இயக்கம் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருகிறது என்றால் அது நாதக. அடுத்து அடுத்து தனித்து நின்று. தோற்றோம். மேலும் மேலும் அதே வெறியோடு எழுந்து நிற்கிறோம். ஐந்தாவது முறையாகவும் சீட்டுக்கு பேரம் பேசாது தனித்து எழுந்து நிற்கிறோம். உயர்ந்த தத்துவத்தோடு நிற்பதால் தனித்து நிற்கிறோம். எந்த துணிவில் தனித்து நிற்கிறோம் எங்களை பெற்றவர்கள் உடன் பிறந்தவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறோம்.

எங்களுக்கான வரலாற்றை எழுத திருச்சி மண்ணில் இன்று திரண்டு உள்ளோம். நமக்கான வரலாறு என்பது திராவிட இயக்கம் தோன்றியது முதல் இருக்கும் நூறாண்டு வரலாறு மட்டும் தான் என கற்று தந்துள்ளார்கள். ஈ.வெ.ரா தொடங்கி இன்று ஸ்டாலின் வரைக்கும் நாளை உதயநிதி வரை வரலாறு என கற்று தந்துள்ளார்கள். தாய்மார்களுக்கு ஆயிரம், மாணவிகளுக்கு ஆயிரம் என கொடுக்கிறார்கள். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள். 

இதையும் படிங்க: காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை உறுதி செய்வது தான் நல்ல ஆட்சி முறை. 5000 வாங்குபவர்கள் கையில் 2 லட்சம்  கடன் இருக்கிறது என்பதை சிந்திக்க தொடங்கினால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கும். தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நல்ல கல்வியையும் மருத்துவத்தையும் தர முடியும் என்றால் தனியார் முதலாளியிடம் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது என்று தான் அர்த்தம். 

தனியார் பள்ளி கல்லூரிகளில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரே தங்கும் விடுதி தான் உள்ளது. ஆனால் அரசு நடத்தும் விடுதியில் ஜாதிக்கு தனித்தனி தங்கும் விடுதிகள் தான் உள்ளது. இலவசங்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பிய பொழுது சிரித்தவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியே அது குறித்து கேட்கும் பொழுது வாய் மூடி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளது. தமிழ்நாட்டின் வளத்தை வைத்து தான் அந்த கடனை பெற்றுள்ளார்கள். கடன் வாங்கி விட்டாலே நாம் கடன் கொடுத்தவர்களுக்கு பொருளாதார அடிமையாக மாறிவிடுவோம். 

தற்காலிகமாக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்து விடக்கூடாது. குறித்த இலக்கு வரும் வரை காத்திருப்பவர்கள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள். திமுக - அதிமுக வெவ்வேறு கட்சி அல்ல எப்படி திருடுவது என ஒரே இடத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான் அவர்கள். திமுக - அதிமுகவிற்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. திமுக என்பது திருடர்கள் முன்னேற்றம் அவர்கள் அகில இந்திய திருடர்கள்.

இதையும் படிங்க: மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share