ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!
தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இருந்தும் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களை காட்டியும், மீன் வியாபாரியிடம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ராமன் மற்றும் அவரது நண்பர் இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மீன் வியாபாரத்திற்காக 80 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்து மீன் வியாபாரத்திற்காக கொள்முதல் செய்து மீன்களை வாங்கி வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவில் சாவக்காடு மற்றும் குன்னங்குளம் ஆகிய பகுதிகளில் மீன்களை விற்றுவிட்டு, அதற்கான ஆவணங்களை விற்றதற்கான ஆவணங்களை மற்றும் வியாபாரத்திற்காக நகைகளை அடகு வைத்த ரசீது மற்றும் மீன்களை பெற்ற 70 ஆயிரம் ரூபாய் உடன் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
அப்போது, வியாபாரிகளை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கேட்ட பொழுது மீன் வியாபாரம் செய்து வந்த பணம் 70,000 ரூபாய் உள்ளதாகவும் அதற்கு உண்டான ரசீதுகள் உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் ஒருமையில் பேசியதோடு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் வியாபாரிகளிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!
தற்போது நள்ளிரவில் உணவு மற்றும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகனத்திற்கு டீசல் இல்லாமலும், நடுவழியில் தவித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் முறையாக சோதனை செய்து ஆவணங்களை காட்டினால் விட ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தகுந்த தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!!