இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கம் கொண்டவை என ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்றும், இத்தகைய தீய நோக்கங்களை நாம் அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் சோஹோ (ZOHO) நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், அரசியல் எழுத்தாளர் ஒருவரின் பதிவை மறுபதிவு செய்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!
அவரது பதிவில், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் வளர்ச்சியைத் முடக்கும் நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இந்தியாவைப் பலவீனப்படுத்த நினைக்கும் சக்திகள் இந்த முயற்சிகளுக்குப் பின்னணியில் இருந்து துணை நிற்கின்றன. இதுபோன்ற தீய நோக்கங்களை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய உலகளாவிய தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்புவின் இந்தத் திடீர் அரசியல் மற்றும் சமூகக் கருத்து, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!