×
 

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

மக்களவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை உறுதிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவை மக்களவை விதிகளை மீறியவை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கிரண் ரிஜிஜு பேசுகையில், “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைமுறை மற்றும் செயல்பாட்டு விதிகள் மிகத் தெளிவாக உள்ளன. ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பினால், முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும். குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தர வேண்டும். ராகுல் காந்தி இதை மீறியுள்ளார்” என்றார்.

ராகுல் காந்தி மக்களவையில் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் நாட்டின் நலன்களை விற்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், முன்கூட்டிய அறிவிப்பும் இல்லை என்றும் கிரண் ரிஜிஜு சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைக்கு வராததை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது குறித்து கிரண் ரிஜிஜு கூறுகையில், “ராகுல் காந்தி தாமதமாக அவைக்கு வந்ததை நினைவூட்ட விரும்புகிறேன். அவர் அவையை மதிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியை அவைக்கு வரவழைத்து விளக்கம் கேட்குமாறு கிரண் ரிஜிஜு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த உரிமை மீறல் நோட்டீஸ் மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆளும் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எதிர்க்கட்சி தரப்பில் இதை அரசியல் பழிவாங்கல் என்று கூறி வருகின்றனர். மக்களவை விதிகளை மீறியதாக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாடாளுமன்ற விவாதங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா என்பது இனி தெரியவரும். 

இதையும் படிங்க: மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share