எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது மக்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
ராமநாத சுவாமி கோவில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோவில். இந்தக் கோவில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், நான்கு புனித சாரதாம் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை சீதை மணலால் உருவாக்கியதாகவும், பின்னர் இராமர் அதை பிரதிஷ்டை செய்ததாகவும் நம்பப்படுகிறது. இந்தியாவின் தெற்கு கடற்கரையில், மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
ராமர் பாலம் இலங்கையுடன் இணைக்கும் புராண முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றும் கூறப்படுகிறது. 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலில் உள்ளூர் வாசிகள் சென்றுவர பாரம்பரிய வழி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை தற்போது மூடி உள்ளதாகவும், 200 ரூபாய் கட்டண வசூல் என்ற அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சம்பவம் செய்த டிரம்ப்.. லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரம்.. மேலும் 2000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு..!
இதற்கு உள்ளூர் வாசிகள், இப்படை ஏராளமான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாரம்பரிய வழிமுறைகளை தடுத்து நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்ட வருகிறது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!